WhatsApp Group Join Now
Telegram Group Join Now

செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் – ரூ.60,000

செங்கல்பட்டு மாவட்டத்தின் மாவட்ட நல வாழ்வு சங்கம் மூலமாக மருந்து அலுவலர், ஒப்பந்த செவிலியர் மற்றும் பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் ஆகிய மொத்தம் 5 காலி பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்: Medical Officer

சம்பளம்: மாதம் ஊதியம் ரூ.60,000/-

காலிப்பணியிடங்கள்: 01

கல்வித் தகுதி: MBBS

பதவியின் பெயர்: Staff Nurse

சம்பளம்: மாதம் ஊதியம் ரூ.18,000/-

காலிப்பணியிடங்கள்: 03

கல்வித் தகுதி: GNM or B.Sc (Nursing)

பதவியின் பெயர்: Multipurpose Hospital Worker

சம்பளம்: மாதம் ஊதியம் ரூ.14,000/-

காலிப்பணியிடங்கள்: 01

கல்வித் தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்ப கட்டணம்:

அனைத்து நபருக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவம் https://chengalpattu.nic.in/ என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மாவட்ட நல வாழ்வு சங்கம், செங்கல்பட்டு அலுவலகத்தில் 23.03.2024 அன்று மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் / துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், (District Health Society), செங்கல்பட்டு மாவட்டம் – 603001, தொலைபேசி எண் – 044 – 29540261.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.03.2024 மாலை 5:00 மணி வரை

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here

விண்ணப்ப படிவம்: Click here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here

Leave a Comment